கனடாவில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு: இந்தியா கண்டனம்| Dinamalar

புதுடில்லி: கனடாவின் ஒன்டோரியோவின் பிரம்ப்டன் நகரில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகள், பஞ்சாபை தனியாக பிரித்து தனி நாடாக அறிவிக்கக்கோரி, ஓன்டோரியோவின் பிரம்ப்டன் நகரில் காலிஸ்தான் ஓட்டெடுப்பு நடத்தின. இதில் பலர் ஓட்டளித்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியதாவது: கனடா மற்றும் வேறு இடங்களில், பிரிவினைவாத மற்றும் இனவாத குழுக்கள் காலிஸ்தான் ஓட்டெடுப்பு நடத்தியது கேலிக்கூத்தான செயல்,

இந்த விவகாரத்தை, தூதரக ரீதியாக கனட அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதாகவும், கனடாவில் நடக்கும் காலிஸ்தான் அங்கீகரிக்க மாட்டோம் என கனடா அரசு உறுதியளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.