லக்னோ, :உத்தர பிரதேசத்தில், ஆறு அடி குழிக்குள் உயிருடன் சமாதி அடைய முயற்சித்த இளைஞர் மற்றும் அவரை மூளைச்சலவை செய்த சாமியார்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, உன்னாவோ மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபம் கோஸ்வாமி. இளைஞரான இவர், ஐந்து ஆண்டுகளாக கிராமத்துக்கு வெளியே காட்டுப்பகுதியில் குடிசை அமைத்து அதில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு சில சாமியார்களுடன் பழக்கம் ஏற்பட்டது. இதில், முன்னாலால், ஷிவ்கேஷ் தீட்சித் என்ற இரு சாமியார்கள், ‘நவராத்திரி விழாவை முன்னிட்டு, 6 அடி பள்ளத்தில் உயிருடன்சமாதி அடைந்தால் ஞானம் கிடைக்கும்’ என கோஸ்வாமியை மூளைச்சலவை செய்துள்ளனர்.
இதை உண்மை என நம்பிய சுபம் கோஸ்வாமியும் அவரது தந்தை வினீத் கோஸ்வாமியும் 6 அடி பள்ளம் தோண்டினர்.பின், சுபம் கோஸ்வாமி அந்தக் குழிக்குள் இறங்கியதும், மூவரும் சேர்ந்து அதை மூடினர். இதைப் பார்த்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல்தெரிவித்தனர். போலீசார் வந்து குழியை திறந்து சுபம் கோஸ்வாமியை மீட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுபம் கோஸ்வாமி, வினீத் கோஸ்வாமி, சாமியார்கள்முன்னாலால், ஷிவ்கேஷ் தீட்சித் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில்அடைத்தனர்.கோஸ்வாமி உயிருடன்சமாதி அடையும் ‘வீடியோ’ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இதற்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement