புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படி உயர்த்தப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் 34 சதவீத அகவிலைப்படியுடன் மேலும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.இதன் வாயிலாக, 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயன் அடைவர். இதனால், அரசுக்கு இந்த நிதியாண்டில் 8,568 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.
புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்