மத்திய அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வு| Dinamalar

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு தீபாவளிக்கு முன்னதாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை, கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் அகவிலைப்படி உயர்த்தப்படும். தற்போது வழங்கப்பட்டு வரும் 34 சதவீத அகவிலைப்படியுடன் மேலும் 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.இதன் வாயிலாக, 41.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயன் அடைவர். இதனால், அரசுக்கு இந்த நிதியாண்டில் 8,568 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.