பிரிவினைவாத தலைவர் மரணம்| Dinamalar

புதுடில்லி, காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், மறைந்த முன்னாள் ஹுரியத் தலைவர் சையது அலி ஷா கீலானியின் மருமகனுமான அல்தாப் அஹமது ஷா, சிறுநீரக புற்றுநோயால் நேற்று உயிரிழந்தார்.

அல்தாப் அஹமது ஷா, ௬௬, பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை இவரை விசாரித்தது. பின், 2017ல், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவர் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்க, புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, இங்கு சிகிச்சைப் பெற்று வந்த அல்தாப் அஹமது ஷா, நேற்று உயிரிழந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.