நீலகிரியில் ஆன்லைன் மூலம் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு அதற்குப் பதில் பார்சலில் கல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சேர்ந்த மோதிலால் லட்சுமன் என்பவர் தனது மனைவிக்காக ஆன்லைன் மூலம் ஒரு செல்போன் ஆர்டர் செய்தார். இதையடுத்து அவர் ஆர்டர் செய்திருந்த செல்போன் பார்சலில் வந்தது.
கணவனும், மனைவியும் பார்சலை ஆசை ஆசையாக திறந்து பார்த்தபோது அதில் தாங்கள் ஆர்டர் செய்திருந்த செல்போனுக்கு பதில் கல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து டெலிவரி பாயிடம் அவர்கள் முறையிட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் மோதிலால் லட்சுமன் தவித்து வருகிறார். ஆசை ஆசையாக மனைவிக்கு செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் கல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in