நயன் – விக்கி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்.. அமைச்சர் தகவல்..!

அண்மையில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளதாக குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். அதே சமயம், வாடகைத்தாய் முறையில் குழந்தைகளை பெற்றுக்கொண்டனரா, குழந்தைகள் பிறந்த உடனே தத்தெடுத்துக்கொண்டார்களா என்ற கேள்விகள் சட்ட விதிகளை மையப்படுத்தி எழுந்தன.

கல்யாணமாகி நான்கு மாதத்துக்குள் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டத்தில் அனுமதி இல்லை. வாடகைத்தாய் முறையில் குழந்தைகளை பெற கடுமையான சட்ட விதிகள் இருப்பதால் இதுகுறித்து நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அமைச்சர், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியிடம் உள்ள குழந்தைகள் எந்த மருத்துவமனையில் பிறந்தார்கள் என்ற விவரம் கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. யார் யார் தவறு செய்துள்ளார்கள், இதில் சட்டம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதைக் கண்டறிந்து, ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தேவைப்பட்டால் தம்பதி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.