நாடு முழுவதும் 60,000 டெங்கு நோயாளிகள்

இந்த ஆண்டு நாடு முழுவதும் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இதுவரை 59,317 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
 
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 19,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
 
இவ்வருடம் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
 
தற்போது பரவி வரும் டெங்கு நோயைக் கருத்திற் கொண்டு, நாட்டின் 36 வலயங்கள் அதிக அபாய வலயங்களாக பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.