அவுஸ்திரேலியாவில் தென்கிழக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தென்கிழக்கு அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கன மழையால் கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேவேளை கனமழை காரணமாக 120 வீதிகள் மூடப்பட்டுள்ளன.