போடி அருகே விருந்துக்கு வந்த இடத்தில் புதுமண தம்பதி உள்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி

போடி:  தேனி அருகே பொம்மயகவுண்டின்பட்டியை சேர்ந்தவர் ராஜா (30). மெடிக்கல் ரெப். இவரது மனைவி காவ்யா (20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. ராஜாவின் சித்தி உமா மகேஸ்வரி போடி சுப்புராஜ் நகர் புது காலனியில் வசித்து வருகிறார். விருந்துக்காக இவர்கள் அங்கு சென்றனர். லண்டனில் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்த உமா மகேஸ்வரியின் மகன் சஞ்சய் (24), விடுமுறையில் வந்திருந்தார். அவர், புதுமண தம்பதியையும், உறவினர் மகனான 12 வயது சிறுவன் சஞ்சய் பிரணவையும் நேற்று காலை பெரியாற்றுக் கோம்பை சின்ன ஆறு பகுதிக்கு காரில் சென்றனர்.

ஆற்றில் இறங்கி 4 பேரும் குளித்தபோது, ஆழமான பகுதியில் ராஜா, காவ்யா, சஞ்சய் ஆகியோர் மூழ்கி தத்தளித்தனர். சிறுவன் சஞ்சய் பிரணவ் கூச்சலிட்டான். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் வந்து ஒன்றரை மணிநேரம் போராடி, தம்பதி உட்பட 3 பேரின் உடல்களையும் மீட்டனர். விருந்துக்கு வந்த இடத்தில் புதுமண தம்பதி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.