T20 WC: கோவிட் பாதிக்கப்பட்ட வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள்- ஐசிசி அறிவிப்பு!

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இப்போட்டி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். கொரோனா பெருந்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல் உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) விதித்து இருந்தது. இந்நிலையில் அந்த கட்டுப்பாடுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தளர்த்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வீரர்களையும் விளையாட சர்வதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள்

அணி மருத்துவர் அனுமதித்தால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வீரர் விளையாட அனுமதிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்ட வீரர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் போட்டியின் போது வீரர்களுக்கு கட்டாய சோதனை எதுவும் இருக்காது என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. பிர்மிங்கமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின், மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலிய வீராங்கனை தஹிலா மெக்ராத் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் விளையாடியது சர்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.