ஆசிரியருடன் கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் வங்கி பெண் அதிகாரி தற்கொலை: ஆன்லைனில் விஷம் வாங்கி தின்றார்

சேலம்: சேலத்தில் வங்கி பெண் அதிகாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தர்மபுரி மாவட்டம், குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் அனிதா (30). சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் விடுதியில் தங்கியிருந்த அவர், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அழகாபுரம் காட்டூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். கடந்த 8ம்தேதி எலிபேஸ்ட் தின்றுள்ளார். தகவலறிந்து பெற்றோர் வந்து   கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உடல்நிலை மோசமடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டு வந்தனர். அங்கு நேற்று அதிகாலை அனிதா உயிரிழந்தார்.

இதுகுறித்து சேலம் அழகாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. வங்கி அதிகாரியான அனிதா, தர்மபுரியில் பணியாற்றியபோது, காவேரிப்பட்டணத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அந்த ஆசிரியருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் மருத்துவம் படித்து வருகிறார்.   ஆசிரியரின் மனைவி  கணவரை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அனிதா, வாழப்பாடிக்கு இடமாறுதல் பெற்று வந்து, விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்தார். அங்கும் வந்து ஆசிரியரின் மனைவி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து எலிபேஸ்ட்டை வாங்கி தின்று தற்கொலை செய்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.