சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..! ஆறுமுகசாமி அறிக்கை எதிரொலி?

ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா 2016 டிசம்பர் 5 இல் உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய் என்றும் அவர் டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்துவிட்டார் என்பது தெரிய வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

, கே எஸ் சிவகுமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்கு ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதனால் சசிகலாவுக்கு சிக்கலான சூழல் நிலவி வருகிறது. இதனை சசிகலா எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகை தந்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் டிடிவி தினகரன் சசிகலாவை நேரில் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.