திருமாவளவனுக்கு மிரட்டல்… முன்ஜாமீன் கேட்ட பாஜக நிர்வாகி… கோர்ட் முடிவு என்ன?

பாஜகவின் மதுரை மாவட்ட நிர்வாகி சுசீந்திரன், கடந்த சில தினமும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்து மக்கள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

தெரிவித்திருந்த கருத்துகளுக்காக, அவரை மிரட்டல் விடுக்கும் விதமாகவும், பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுசீந்திரன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, வழக்கு நடைபெறும் மதுரை கீழமை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும், மறு உத்தரவு வரும்வரை சிலைமான் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் சுசீந்திரனுக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.