வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரியாமணி

ஐதராபாத்: அமீர் இயக்கிய ‘பருத்திவீரன்’ படத்துக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் பிரியாமணி. திருமணத்துக்குப் பிறகு தமிழில் அவருக்கு புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு மற்றும் இந்தியில் நடித்து வருகிறார். திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், தற்போது வெங்கட் பிரபு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் இதில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். தற்காலிகமாக ‘என்சி 22’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நாகசைதன்யா ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் வெளியூரில் நடந்து வரும் நிலையில், முக்கிய கேரக்டர்களில் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரேம்ஜி அமரன், பிரேமி விஷ்வானந்த், சம்பத்ராஜ், வெண்ணிலா கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பவன்குமார் வழங்க, னிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் னிவாசா சித்தூரி தயாரிக்கிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர்.கதிர்  ஒளிப்பதிவு செய்கிறார். இது வெங்கட் பிரபு இயக்கும் 11வது படமாகும்.  தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் மட்டுமல்ல, நாகசைதன்யா நடிக்கும்  நேரடி தமிழ்ப் படமும் கூட. இளையராஜா, அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைக்கின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்துக்கு அவர்கள் இணைந்து இசை அமைத்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.