பீஜிங் : சீன வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பிரிட்டனின் முன்னாள் விமானப்படை வீரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல்வேறு நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. தைவானை தன்னுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரிட்டன் விமானப்படையின் ஓய்வு பெற்ற விமானிகளை பெரும் சம்பளம் கொடுத்து தங்கள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.இவ்வாறு 30 விமானிகள் சீனா சென்றுள்ளதாக பிரிட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்திய நாடுகளின் ராணுவ விமானங்கள், விமானிகள் செயல்பாடுகளை சீனா புரிந்து கொண்டால் அது உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானிகள் செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பிரிட்டன் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement