புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 97 விசைப்படகுகளில் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்களுடன் கோட்டைபட்டினம் சதாம் நகரை சேர்ந்த அருள்(36), அய்யப்பன்(30), சுந்தரம்(26) ஆகியோர் ஒரு விசைப்படகில் சென்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கு 3 மீனவர்களும், 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினர், ரித்திஷின் விசைப்படகை சுற்றி வளைத்ததோடு, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 3 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை படகுடன்  கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.