மரத்துப்போனதா மனிதநேயம்? – மருத்துவமனையில் தூங்கியதற்கு இப்படி அடித்து உதைக்கவேண்டுமா?

மருத்துவமனை வெயிட்டிங் ஹாலில் கூலரை ஆன்செய்து படுத்து உறங்கிய நபரை பெண் ஒருவர் செருப்பால் அடித்து, உதைத்து சரமாரியாக தாக்கும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது.
திங்கட்கிழமை சத்தீஸ்கரில் இந்த அசிங்கமான சம்பவம் நடந்துள்ளது. அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்பு அறையில் படுத்துறங்கிய நபர் அங்கிருந்த கூலரை ஆன் செய்து தூங்கியுள்ளார். காலை அங்குவந்த பெண் ஒருவர் கூலரை ஆஃப் செய்துள்ளார். ஏன் ஆஃப் செய்தீர்கள் என அந்த நபர் கேட்டதுதான் தாமதம்… உடனே அந்தப் பெண், படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்த நபரை, செருப்பால் பலமுறை அடித்ததுடன், காலால் பலமுறை எட்டி எட்டி உதைக்கிறார். இதற்கிடையில் அங்கு நின்ற நபர் ஒருவர் அந்த நபரை குச்சியால் குத்துகிறார்.
image
இதனையறிந்து அங்குவந்த பாதுகாப்பு பணியாளர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் தாக்கப்பட்ட நபர் அந்த பெண்ணுக்கு எந்த பதிலடியும் தரவில்லை. அமைதியாக தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து செல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி பலரின் கவனத்தையும் திருப்பியிருக்கிறது.

छतीसगढ़ के अंबिकापुर मेडिकल कॉलेज के OPD में एक महिला ने युवक की पिटाई कर दी. बताया जा रहा है कि महिला ने ये सिर्फ़ इसलिए किया क्योंकि हॉल में चल रहे कुलर को महिला ने बंद कर दिया था. इस व्यक्ति ने महिला से कूलर बंद करने का कारण पूछा लिया. pic.twitter.com/BrZ2xvL4Sa
— Priya singh (@priyarajputlive) October 19, 2022

இதுகுறித்து விசாரணை நடத்திய மருத்துவமனை நிர்வாகம், அந்த நபர் ஆதரவற்றவர் என்றும், தூங்குவதற்கு இடம்தேடி மருத்துவமனைக்குள் வந்த அவர், கூலரை ஆன்செய்து தூங்கியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், தேவையற்ற நபர்கள் உள்ளே நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.