10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’வை, அக்.22ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!

நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’வை, வரும் 22ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்கும் அந்நிகழ்ச்சியில், முதற்கட்டமாக 75 ஆயிரம் பேருக்கு, பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட உள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளின் பணிகளில் சேருவார்கள்.

யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.