"தயவு செய்து அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்"- பிரசாந்த் கிஷோர் மீது நிதிஷ் குமார் தாக்கு

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்த பிறகு, நிதிஷ் குமாரை பா.ஜ.க ஒருபக்கம் விமர்சிக்க, மறுபக்கம் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரும் அவரை விமர்சித்துவருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட, “நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது மீண்டும் அவர் பா.ஜ.க-வுடன் இணைவார்” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.

பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் இத்தகைய பேச்சுக்கு, நிதிஷ் குமாரும் தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

பிரசாந்த் கிஷோர் குறித்து செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய நிதிஷ் குமார், “தயவுசெய்து அவரைப் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்.

மீரா குமாரை ஏன் ஆதரிக்கவில்லை… நிதிஷ் குமார் விளக்கம்!

தன்னுடைய சொந்த விளம்பரத்துக்காகத் தொடர்ந்து இதுபோன்று அவர் பேசிவருகிறார். மேலும், அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. நான் அவரை மதித்த காலமும் இருந்தது. ஆனால், இப்போது அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர் இளையவர். நான் மதித்த நபர்களெல்லாம் என்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள். இது எல்லாமே உங்களுக்கும் தெரியும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.