‘போல்ட் நட்’ விழுங்கிய நபரின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ‘போல்ட் நட்’ விழுங்கிய எலக்ட்ரீஷியனுக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி வாயிலாக, அறுவை சிகிச்சை செய்து, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

குனியமுத்தூரை சேர்ந்த சாம்சுதின், எலெக்ட்ரீசியனான இவர். கடந்த 18-ஆம் தேதி வேலை செய்யும் போது வாயில் வைத்திருந்த ‘போல்ட் நட்’டை எதிர்பாராதவிதமாக விழுங்கி விட்டார்.

இதனால் இருமல், மூச்சு திணறல் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

சிடி ஸ்கேனில், இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில், ‘போல்ட் நட்’ சிக்கி இருந்தது தெரியவந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.