மழலை குரல்.. காவலர் உடை.. வியப்பூட்டும் வீரம்.. நெகிழ்ச்சியில் ஆழ்த்திய சிறுவன்

சென்னை மயிலாப்பூர் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற இரண்டாவது படிக்கும் சிறுவன் தருண் என்பவர், தான் படித்து ஐ.பி.எஸ் பணியில் சேருவேன் என மழலைக் குரலில் தெரிவித்தது காண்போரை நெகிழ வைத்தது
சிறுவன் தருண் பேசுகையில், ’’நான் போலீஸாகி திருடர்களை பிடிப்பேன். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன். சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பேன்’’ என்றார். உனக்கு எதற்கு போலீஸை பிடிக்கும் என்று கேட்டதற்கு, ‘’அதுதான் இருப்பதிலேயே நல்ல வேலை’’ என்றார். மேலும், உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்த தான் வந்ததாகவும் தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.