22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவுக்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மாத்திரமே சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்.அதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர்  அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற 3ஆவது வாசிப்பின் போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

3ஆவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் 174 பேர் ஆதரவாகவும், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை எனவும் ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையெனவும் சபாநாயகர் அறிவித்தார்.

அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் (20) இன்றும் (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது, இன்றையதினம் வாக்கெடுப்பு இடம்பெற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.