பிரதமர் நரேந்திர மோடி 5G டெலிகாம் சேவை இந்திய கல்வி துறையை அடுத்த லெவெலுக்கு எடுத்து செல்லப்போகிறது என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். முக்கியமாக ஸ்மார்ட் வசதிகள், ஸ்மார்ட் வகுப்புகள், ஸ், ஸ்மார்ட் பயிற்சி முறைகள் போன்றவை இந்த 5G சேவை மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை இந்தியாவை அடிமை மனப்பான்மையில் இருந்து வெளியே கொண்டுவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆங்கிலம் என்பது பலர் அறிவு அளவுகோல் என்று கருதுவதாகவும் அது வெறும் பேசுவதற்கான மொழி மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இனி Virtual reality முறையில் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம் என்றும் அதற்கு இந்த 5G வசதி மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Nothing போன்களில் இனி 5G வசதி அறிமுகம்! Jio நிறுவன வாடிக்கையாளர்கள் குஷி!
கிராமத்தில் உள்ள மாணவர்கள் பலரால் அவர்களின் கனவுகளை அடைய முடிவதில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு போதிய ஆங்கில புலமை இல்லை. இதன் காரணமாகவே தாய் மொழியில் இனி கல்வி கற்கமுடியும் என்ற முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஏழை மாணவர்களும் இனி ஆங்கிலம் கற்காமல் மருத்துவராகவும், பொறியாளராகவும் மாற முடியும். இந்தியாவில் உள்ள மக்களை அடிமை மனப்பான்மையில் இருந்து இந்த புதிய கல்வி கொள்கை வெளியே கொண்டுவரும்.
Diwali Scam: தீபாவளி பரிசு தரும் சீன வலைத்தளங்கள்! மக்களே உஷார்!
அதற்கு உறுதுணையாக தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள 5G சேவை பயன்படும். இதன் மூலம் பல கிராமங்களில் உலா பள்ளிகளுக்கும் இனி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். இந்த புதிய டெக்னாலஜி மூலம் மிக முக்கியமாக கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்