இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா:  ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது NSIL மூலம் ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர் OneWebக்கான பிரத்யேக வணிகப் பணி என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜி.எஸ்.எல்.வி. ரகத்தை சேர்ந்தது எல்.வி.எம்.  இந்த மார்க் 3 ராக்கெட் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோ ஜெனிக் வகை எந்திரங்களில் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது.

இந்த ராக்கெட்மூலம், இங்கிலாந்து ஒன்வெப் நிறுவனத்தின்  36 செயற்கை கோள்கள் இன்று  நள்ளிரவு விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது. முழுக்க முழுக்க வணிக நோக்கும் நடைபெறம் இந்த பணிக்கான  24 மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

வணிக பயன்பாட்டுக்காக செயல்படுத்தப்படும் இந்த திட்டமானது இஸ்ரோவின் நியு ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் ‘ஒன்வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. உலகின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது அரசு, வர்த்தகம், கல்வி பயன்பாட்டுக்கான தொலை தொடர்பு சேவைக்காக இந்த செயற்கை கோள்களை அனுப்ப இருக்கிறது. இந்தியாவின் ஏர்டெல் தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஒன்வெப் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரராகவும், முதலீட்டாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.