எப்படி இருந்த சரண்யா இப்படி ஆயிட்டார்

குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த சரண்யா நாக், பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடிக்க தேர்வானார். ஆனால் அந்த ஆடிசனில் கடைசியாக வந்து சேர்ந்த சந்தியா தேர்வாகி விட சரண்யாக அவரின் பள்ளி தோழியாக நடித்தார். அதன் பிறகு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைகாலம், ரெட்டை வாலு, ஈரவெயில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் சரண்யாவுக்கு அடையாளம் தந்தது பேராண்மை படம்தான்.

நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததால் வீட்டிலேயே முடங்கினார். இடையில் அவருக்கு திருமணமாகிவிட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவியது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. என்றாலும் சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் சரண்யா தனது தற்போதைய தோற்றத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளர். உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க முயற்சிக்கலாமே என்று அவர்கள் அவரை கேட்டு வருகிறார்க்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.