ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு: கைதானவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைதானவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, ஈரோடு ஆசிப் முஸ்தகீன் என்பவர் கடந்த ஜூலை 26-ல்கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், அவர் அரபிமொழியில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் நடத்திய உரையாடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரிஅவர் தாக்கல் செய்த மனுவை,ஈரோடு மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ‘‘மனுதாரரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பின்னரே பென் டிரைவ், டைரி,செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை குறித்து கைது தகவலில் குறிப்பிடவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது’’ என்று கூறி, வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.