சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியது ஜியோ நிறுவனம்…

மும்பை: ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை இன்று தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி  5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டகமாக டெல்லி சென்னை உள்பட பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து  தமிழகத்தில்  ஏர்டல் நிறுவனம்  5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று ரிலையன்ஸ் நிறுவனமான ஜியோ 5ஜி சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

இன்று சென்னை மற்றும் ராஜஸ்தானில், தனது 5ஜி சேவையைஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், ‘ நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்த 5ஜி சேவை கிடைக்கவேண்டும். ஜியோவின் வெல்கம் ஆஃபர் மூலம் ஜியோ 5ஜி சேவையை ஜியோ 5ஜி பயனர்கள் அனுபவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார் .

ஜியோவின் வெல்கம் ஆஃபரில் புதிதாக சென்னை நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை நகரவாசிகள் அழைப்பு முறையில் ஜியோவின் 5ஜி சேவைகளை அனுபவிக்கலாம்’ என்று பேசினார். ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் அழைப்பு முறையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையிலும் இதே போல் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை பெறுவதற்கான அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் 5ஜி சேவையைப் பெறலாம். இதற்காக 5ஜி சிம் எதுவும் வாங்கத் தேவையில்லை. 5ஜி ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று 5ஜி ஆப்ஷனை ஆன் செய்தாலே போதும். 4ஜி சிம் மூலமாகவே 5ஜி சேவையை அனுபவிக்கலாம். அதுவும் 1 Gbps வேகத்தில், இலவசமாகப் பெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.