போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் பதில் ரோஜா பூ – குஜராத் அமைச்சர் தகவல்

குஜராத் மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படுவதற்கு பதில் போலீசார் ரோஜா பூ கொடுப்பார்கள் என அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில், ‘பாதுகாப்பான தீபாவளி, பாதுகாப்பான நகரம்’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

முதலமைச்சர் அறிவுரைப்படி முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 21 ஆம் தேதி முதல் வரும் 27 ஆம் தேதி நள்ளிரவு வரை, மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதிக்க மாட்டார்கள். ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல் என போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்காமல் ரோஜா பூ கொடுத்து வாழ்த்துவார்கள்.

பண்டிகை காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அபராதம் கட்டுவதை விட சின்ன சின்ன பொருட்களை வாங்க மக்களுக்கு பயன்படுத்துவார்கள் என்பதால், மக்களின் நலன் கருதி இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது. இதனால், யாரும் விதிகளை மீறலாம் என நினைக்காமல், பண்டிகை காலங்களில் கூடுதல் கவனத்துடன் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.