மக்களை மது அடிமையாக்கிய அரசு; நார்.. நாராக.. கிழித்தெடுத்த ஆளுநர்!

கேரளாவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பங்கேற்று பேசியதாவது:

கேரளாவில் மது விற்பனையை ஊக்குவிப்பதால் போதைப்பொருள்களின் தலைநகராக பஞ்சாப் மாநிலத்துக்கு பதிலாக கேரளா மாறுகின்றது. பொதுவாகவே எல்லோரும் மது அருந்துவதற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

ஆனால் கேரளாவில் மது அருந்துதல் ஊக்குவிக்கப்படுகிறது. இது என்ன அவமானம்? இங்கு நம்முடைய வளர்ச்சிக்கு லாட்டரியும், மதுவும் போதும் என்று முடிவு செய்துள்ளோம்.

சசிகலாவை சிக்க வைத்த சாட்சி; உறவினரே வீழ்த்தியது அம்பலம்!

இது 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலத்தின் அவமானகரமான நிலை. கேரளா மாநிலத்தின் தலைவரான நான் மாநிலத்தின் 2 முக்கிய வருவாய் லாட்டரி மற்றும் மது என்பது குறித்து வெட்கப்படுகிறேன்.

லாட்டரி என்றால் என்ன? இங்கு அமர்ந்து இருக்கும் உங்களில் யாராவது எப்போதாவது லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறீர்களா? ஏழைகள் மட்டுமே லாட்டரி சீட்டு வாங்குகிறார்கள்.

நீங்கள் ஏழைகளை கொள்ளை அடிக்கிறீர்கள். உங்கள் மக்களை மதுவுக்கு அடிமையாக்குகிறீர்கள். இவ்வாறு கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

எடப்பாடிக்கு ஆளுநர் மூலம் செக்; பலே ஆட்டத்தை துவங்கிய பாஜக!

மேலும் கேரளாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான பிரச்சனைகளையும் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் எழுப்பினார்.

துணை வேந்தர்களை நியமிப்பது ஆளுநர் பொறுப்பு என உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தி இருக்கிறது. அதில் மாநில அரசுக்கு எந்த பங்குமே இல்லை என்றும், அரசு ஏதேனும் சட்டம் இயற்றினால், அது.. பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைபடிதான் இருக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.