மத்திய பிரதேச பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு

டெல்லி: மத்திய பிரதேச பேருந்து விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதியருகே சென்று கொண்டிருந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில்:
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவாவில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்து நெஞ்சை உலுக்குகிறது. இதில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.