வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருமாறியது..!!

டெல்லி: வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருமாறியது. வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு, கிழக்கு வங்கக்கடலில் 24-ம் தேதி புயலாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் பல பகுதில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.