தமிழ்நாட்டிலுள்ள 20 மாநகராட்சிகளின் (பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள் தொகைக்கேற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சி தவிர, இதர மாநகராட்சிகளுக்கான “தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிகள் 1996” உருவாக்கப்பட்டு, அப்பணி விதிகள் 01.10.1996 முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மேலும், நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்போது, மாநகராட்சிகளில் தோற்றுவிக்கப்படாத நகராட்சிப் பணியிடங்களை மாநகராட்சிப் பணியிடங்களுக்கு இணையாக எவ்வாறு பொருத்துவது என்பது குறித்தும், பொது அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பணியிடங்கள்
(1) பணியாளர் பிரிவு
(Personnel Wing)
(2) வருவாய் மற்றும் கணக்கு பிரிவு
(Revenue & Accounts Wing)
(3) பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு
(Engineering & Water Supply Wing)
(4) பொது சுகாதாரப் பிரிவு
(Public Health Wing)
மாநகராட்சிகளில் வார்டு அலுவலகம் அமைத்தல், மைய அலுவலகங்களை மறுசீரமைத்தல் தொடர்பான வரையறைகள் வெளியிடப்பட்டுள்ளன.