தீபாவளி பண்டிகை: மேலும் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

தீபாவளிக்கு நாகர்கோவில் பெங்களூரு- கொச்சுவேலி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில் பெங்களூரு மற்றும் கொச்சுவேலி தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. நாகர்கோவில் – பெங்களூர் சிறப்பு ரயில் அக்டோபர் 25 ஆம் தேதி அன்று நாகர்கோவிலில் இருந்து இரவு 07.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு பெங்களூர் சென்று சேரும் எனவும், மறு மார்க்கத்தில் பெங்களூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் பெங்களூரில் இருந்து அக்டோபர் 26 ஆம் தேதி அன்று காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும், ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டியுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்,
image
கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு ரயில் அக்டோபர் 25 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலியில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் அக்டோபர் 26 ஆம் தேதி அன்று தாம்பரத்திலிருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
இந்த ரயில் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.