மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி வடமத்திய மாகாண பிரதான சங்கநாயக்க தேரர் கலாநிதி வண.பல்லேகம சிறினிவாசவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (22) முற்பகல் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி, அங்கே வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டிலும் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

இச்சந்தர்ப்பத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாளித்த ரங்கே பண்டார உள்ளிட்ட பலரும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டதுடன் மறைந்த அட்டமஸ்தானாதிபதியின் தேகத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

PMD

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.