உலகின் சிறந்த நகரமாக டெல்லியை மாற்றி காட்டுவோம் – அரவிந்த் கெஜ்ரிவால்

ஆசியாவின் மிகவும் மாசு நிறைந்த 10 நகரங்களில் 8 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்றும் அந்த பட்டியலில் டெல்லி இல்லை என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

காற்று மாசு தொடர்பான அறிக்கையை மேற்கோள் காட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக கருதப்பட்டது, ஆனால் இப்போது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆசியாவிலேயே மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில், இந்தியாவை சேர்ந்த எட்டு நகரங்கள் உள்ளது என்றும் டெல்லி அந்த பட்டியலில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், இது ஒரு தொடக்கம்தான் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. டெல்லி மக்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். இன்று, நாம் நிறைய முன்னேறியுள்ளோம். உலகின் சிறந்த நகரங்களில் டெல்லி ஒரு இடத்தைப் பெற நாங்கள் தொடர்ந்து கடினமாக உழைக்கிறோம். டெல்லியை உலகின் சிறந்த நகரமாக மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் ஹரியாணாவின் குருகிராம் முதல் இடத்தில் உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி, ஹரியானாவின் தருஹேரா நகரம், பீகாரில் உள்ள முசாபர்பூர், லக்னோ, பீகாரின் பெகுசராய், உத்தர பிரதேசத்தின் சவுராஹா, மகாராஷ்டிராவின் கடக்பாடா, தர்ஷன் நகர் ஆகிய நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.