குடியுரிமை தொடர்பில் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி…



ஜேர்மன் அரசு குடியுரிமை விதிகளை நெகிழ்த்துவது தொடர்பில் விவாதிக்க உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்வது தொடர்பான விவாதம் அது.

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமைச் சட்ட மாற்றம் தொடர்பிலான செய்திக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜேர்மன் நாடாளுமன்றத்தில் குடியுரிமைகள் குறித்த சட்ட வரைவு தொடர்பில் விவாதம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சட்ட வரைவின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது.

அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அதையும் மாற்றி, மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தால் போதும், ஆனால், ஜேர்மனியுடன் ஒருங்கிணைந்து வாழ்ந்திருக்கவேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட உள்ளது.

இப்போதைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றிலிருந்து ஜேர்மனியில் வாழ வருவோர் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்கலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், அந்த விதியையும் மாற்ற புதிய அரசு வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.