பட்டாசு வெடிப்பதில் அக்கா – தங்கை இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. அடுத்து அரங்கேறிய சோக சம்பவம்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயதாரணி என்ற மகள் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஜெயதாரணியின் தங்கை வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டிருந்தார். அப்போது எனக்கும் பட்டாசு தர வேண்டும் எனக் கூறி ஜெயதாரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைக் கண்ட தாய் நாகபிரியா ஜெயதாரினியை கண்டித்துள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜெய தாரணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.