பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார் போரிஸ் ஜான்சன்.. பிரிட்டனின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்?

இங்கிலாந்து பிரதமருக்கான போட்டியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பொறுப்புக்கான போட்டியில் இருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து 140 எம்பிக்களின் ஆதரவுடன் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் புதிய பிரதமராக இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதாக கூறிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போட்டியில் இருந்து விலகினார்.

எதிர்த்து போட்டியிடும் பென்னி மார்டன்ட், இன்றைக்குள் 100 எம்பிக்களின் ஆதரவைப் பெறாவிட்டால், ரிஷி சுனக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.