தமிழக டாஸ்மாக் கடைகளில், தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் 464.21 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதில் இதர பண்டிகைகளை விட தீபாவளி பண்டிகைக்கு விற்பனை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ.464.21 கோடிக்கு மது விற்பனையாகிள்ளது.
அந்தவகையில், சென்னையில் மட்டும் 22, 23 ஆகிய தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் மதுரை மண்டலத்தில் – ரூ.55.78 கோடி, சேலம் மண்டலத்தில் – ரூ.52.36 கோடி, சென்னை மண்டலத்தில் – ரூ.51.52 கோடி, திருச்சி மண்டலத்தில் – ரூ.50.66 கோடி, கோவை மண்டலத்தில் – ரூ.48.47 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, 431 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.