முடங்கியது வாட்ஸ்அப்

புதுடெல்லி: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாட்ஸ் அப் சேவை நேற்று 2 மணி நேரம் முடங்கியது. இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட பல நகரங்களில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது. இதே போல், அமெரிக்கா, ஜெர்மனி, தென்னாப்ரிக்கா, பக்ரைன், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், பயனர்களால் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. பின்னர், 2 மணி நேரத்திற்குப் பிறகுஇதன் சேவை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

* கூகுளுக்கு மீண்டும் ரூ.936 கோடி அபராதம்
இந்தியாவில் வர்த்தக நெறிமுறைகளை மீறி, ஆன்ட்ராய்டு செல்போன் உள்ளிட்ட பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் கூகுள் நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் கடந்த 20ம் தேதி ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது. இதைத் தொடர்ந்து, பிளே ஸ்டோர் கொள்கைகளை மீறியதாக நேற்று மேலும் ரூ.936.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.