தேவர் தங்க கவசத்துக்கு முட்டி மோதிய ஓபிஎஸ், இபிஎஸ்… கோர்ட் தீர்ப்பில் வந்த ட்விஸ்ட்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நாளில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க கவசத்தை எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரி (எடப்பாடி தரப்பு) அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது வங்கி தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயம் தரப்பிலும் நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

வழக்கில் ஒ.பன்னீர் செல்வம் தரப்பை வழக்கில் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு தங்க கவசத்தை ஒப்படைக்க ஓபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த மனு இன்று மீண்டும் நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக தேவர் தங்க கவசம், ராமநாதபுரம் DRO வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அவர் தமது பொறுப்பில் அதனை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவித்து மீண்டும் அதனை வங்கியில் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ராமநாதபுரம் காவல்துறையினர் கவசத்திற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.