கொரோனா முதன்முதலில் பரவிய வூஹானில் மீண்டும் ஊரடங்கு..!

கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவிய சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதியானதால், வூஹானில் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்ட நிலையில், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் மட்டுமே செயல்படுகின்றன.

சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்ற ஹன்யாங்கிலும், மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.