வதோதராவில் சி-295 போக்குவரத்து விமான கட்டுமான ஆலைக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்கப்படவுள்ள சி-295 போக்குவரத்து விமான தயாரிப்பு ஆலைக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இந்த ஆலையில் இந்திய விமானப்படைக்கு தேவையான சி-295 போக்குவரத்து விமானங்களை, டாடா-ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்  என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் விமானப்படைக்கு 40 விமானங்கள் தயாரிப்பதோடு, கூடுதலான விமானங்களும் கட்டமைக்கப்படும் என்றும், அங்கு தயாராகும் விமானங்கள் வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் என்றும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.