செங்கல் சூளையில் வேலை தொடர்பான முன்விரோதத்தில் இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக்கொண்ட சம்பவம்..!

தென்காசி கடையம் அருகே, செங்கல் சூளையில் வேலை பார்ப்பது தொடர்பான முன்விரோதத்தில், இருதரப்பினர் அரிவாள், கட்டை கம்புடன் சரமாரியாக தாக்கிக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கானாவூரையை சேர்ந்த ஜெகன் அந்தோணி, அவரது மனைவியுடன், தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல், ஜெகன் அந்தோணியை அவதூறாக பேசி, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர்.

இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்ட நிலையில், அங்கிருந்தவர்கள் இதனை வீடியோ பதிவு செய்துள்ளனர். படுகாயமடைந்த ஜெகன் அந்தோணி அளித்த புகாரின் பேரில், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, கடையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.