மூன்று நாட்களுக்கு சம்பவம்.. வெளுக்க போகும் கனமழை… வெதர்மேன் தகவல்

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. பருவ மழையால் சென்னையில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 1 வரை மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த மூன்று நாட்களில் வட தமிழகம் மற்றும் தென் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை காத்திருப்பதாக தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை மைய தகவல்படி, நாளை (அக்டோபர் 29) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தூத்துக்குடி, தூத்துக்குடி, தூத்துக்குடி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 30

அக்டோபர் 30 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், தேனி, கரூர், கள்ளக்குறிச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலை முறையே 34˚C மற்றும் 24˚C ஆக இருக்கும் எனவும் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மணிக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் அதிவேகக் காற்று வீசக்கூடும் என்பதால் இவ்விரண்டு நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் தேங்கி காணப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பெருஞ்சாணி அணையைத் தொடர்ந்து பேச்சிப்பாறை அணைக்கும் இன்று அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணை நிரம்பியதை தொடர்ந்து அணையில் இருந்த உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

சென்னையில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுவதை தடுக்க மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், பல்வேறு இடங்களில் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. இந்த நிலையில் பருவ மழை தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு சம்பவம் காத்திருக்கு என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பது சென்னை மக்களுக்கு லேசான கலக்கத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.