குஜராத்: அறுந்து விழுந்த கேபிள் பாலம்; 32 பேர் பலி! – தொடரும் மீட்புப்பணி; நெஞ்சை உலுக்கும் சோகம்

குஜராத் மாநிலம், மோர்பி பகுதியிலுள்ள கேபிள் பாலம் ஒன்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது சுமார் 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400 பேர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

பாலம்

பாலம் அறுந்து விழுந்த தகவல் கிடைத்த உடனே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, துரிதமாக மீட்புப்பணிகளை தொடங்கினர். அவர்களுடன் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நெஞ்சை உலுக்கும் இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு, மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், மாநில அரசு சார்பில் ரூ. 4 லட்சம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.