கட்டாரில் நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் காலத்திற்கு இணையாக , நீர்கொழும்பு கடற்கரையில் ‘FIFA வலயம்’ ஒன்றை இலங்கை சுற்றுலா அமைச்சு ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் 3 இரவும் 4 பகல்களும் (3 night and 4-day) stay தங்கியிருக்கக்கூடியவகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ‘FIFA வலயத்தை’ சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (03) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
‘FIFA Zone’ க்கான பயண மீள்வுச் சீட்டு (Return ticket) பேக்கேஜ், மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதி, உணவுக் கடைகள் மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன