கொழும்பில் டெங்கு உச்சத்தை எட்டக்கூடும் – மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

கொழும்பு மா நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ,இந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களிலும்  ,அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலும் டெங்கு நோயானது உச்ச மட்டத்தை எட்டும் என பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி கூறியுள்ளார்.

இம்மாதத்தின் பிற்பகுதியிலும், டிசெம்பர் மாதத்திலும், அடுத்த வருடம் ஜனவரி மாதத்திலும் இதன் உச்ச மட்டத்தை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை, கல்கிசை, கோட்டே மற்றும் கொலன்னாவ போன்ற பகுதிகளில் டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ள போதிலும், நகரத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இருந்திருக்கக்கூடிய பெரும்பாலான டெங்கு நுளம்பு குடம்பிகள் மழை நீரில் அடித்துசெல்லப்பட்டிருக்கும். எனவே கொழும்பு நகரில் இது ஒரு பிரச்சினையாக இப்போது அமையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில் ,இந்த மாதத்தின் பிற்பகுதியிலும், டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரியில் டெங்கு உச்சநிலையில் பரவும் அபாயம் உண்டு எனவும் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களின்படி,இதுவரை இந்த ஆண்டு நாடு முழுவதும் 49 ஆயிரம் டெங்கு தொற்றாளர்களும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 586 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.