மருத்துவமனை சொன்ன தகவல்… இம்ரான் கான் ஆதரவாளர்கள் நிம்மதி!

பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் (70) தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதில் வெளிநாட்டு சதி இருப்பதாக முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கூறி வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் நடைபெற்ற பேரணியில் இம்ரான் கான் இன்ற கலந்து கொண்டார். அப்போது பேரணியில் இருந்த மர்ம நபர், இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளி்க்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக லாகூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்க் தெரிவிக்கின்றன.

இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தானில் பெரும் பதற்றம்!

அவரது கால்களில் குண்டு துளைத்துள்ளதாகவும், ஆனாலும் அவர் உயிருக்கு ஆபத்து ஏதுவும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர் நிம்மதி அடைந்துள்ளனர்.

முன்னதாக, பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் ஆகியோர் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திகுந்தனர். அந்நாட்டு ராணுவமும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.