ட்விட்டர் இந்தியா ஊழியர்களுக்கு கல்தா – எலான் மஸ்க் அதிரடி!

ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து அண்மையில் வாங்கினார். இதை அடுத்து ட்விட்டர் நிறுவனத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். அதாவது, புளூ டிக் கட்டணம், ஊழியர்கள் குறைப்பு, விளம்பரங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரையும் எலான் மஸ்க் பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி, ட்விட்டர் இந்தியா அலுவலகத்திற்கு இ – மெயில் மூலம் உத்தரவு வந்ததாகவும், அதில் மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேசன் துறையில் பணியாற்றி வந்த ஊழியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்தாக கூறப்படுகிறது.

ட்விட்டர் நிறுவனத்தை, எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் விலைக்கு வாங்க நேரிட்டதால், செலவுகளை குறைப்பது மற்றும் வருவாயை பெருக்குவது ஆகியவற்றில், எலான் மஸ்க் வேகமாக செயல்பட வேண்டிய நெருக்கடி எழுந்துள்ளது.

முதற்கட்டமாக உலகம் முழுவதும் உள்ள அலுவலகங்கள் மூட உத்தரவிட்டதாகவும்,

இந்தியாவில் உள்ள அலுவலகத்தில் மார்க்கெட்டிங், கம்யூனிகேசன் ஆகிய துறைகளில் பணியாற்றி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எலான் மஸ்க் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவன ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.